பொன்னேரி: மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய துவக்கப் பள்ளிகள் பழுதடைந்துள்ளதால் இதனை பார்வையிடும்படி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பிரமணி நிர்வாகிகள் சங்கர், ஷேக் அகமது, சீனிவாசன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ரவி மற்றும் நந்தியம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் ஆகியோர் பள்ளிக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.