கலபுர்கி: கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டம் செவாலகிரி கிராமத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய நிகழ்வில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 வாகனங்களும் உருக்குலைந்து, அதில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.