×

கைபேசியில் பேசியபடி சென்றதால் விபரீதம்!! திருப்பத்தூர் அருகே கிணற்றில் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!!...பெற்றோர், உறவினர்கள் வேதனை!!!

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கைபேசியில் பேசியபடி சென்றதால் கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அடுத்த குட்கந்தூர் பகுதியை சேர்ந்த லட்க்ஷனா என்ற இளம்பெண்ணே உயிரிழந்தவராவார். வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் லட்க்ஷனா செல்போன் பேசியபடியே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் கிணற்றில் விழுந்த லட்க்ஷனாவை மீட்க முயன்றனர்.

இருப்பினும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர், நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்று உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களை மறந்து செல்போனில் சுவாரசியமாக பேசிக்கொண்டு எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து லட்க்ஷனா போன்று செல்போன் பேசிக்கொண்டே விபத்தில் சிக்கிக் கொள்வதும், ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு நடந்துகொண்டு செல்பி எடுக்கும் மோகத்தில் பலர் ரயிலில் அடிபட்டு நீர்நிலைகளில் விழுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. மேலும் சிலர் டூவீலர் ஓட்டிக்கொண்டே செல்பி எடுத்து விபத்தில் இறந்தவர்களும் உண்டு. செல்போன், மனிதர்களின் தொடர்புக்கு இன்றியமையாத ஒன்று. அதே நேரத்தில் பலர் முற்றிலும் தங்களை மறந்து அதில் மூழ்கி உயிரை விடுகிறார்கள்.

Tags : Teen ,relatives ,Tirupati ,Parents , Disaster because it went like talking on a cell phone !! Young girl dies after falling into well near Tirupati !! ... Parents, relatives in pain !!!
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது