சென்னை: எஸ்.பி.பிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். எஸ்.பி.பி மறைவு செய்தி கேட்டதும் அவர்கள் சோகத்தில் மூழ்கினர். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எஸ்.பி.பி தொடர்பான பதிவுகளை பதிவிட்டு நெகிழ்ச்சியான கருத்துகளை பதிவிட்டனர். தேசிய அளவிலும் டிவிட்டர், பேஸ்புக்கில் எஸ்.பி.பி பற்றிய பதிவுகள் டிரெண்ட் ஆனது. சில நாடுகளில் ஊடகங்களிலும் எஸ்.பி.பியின் மறைவு குறித்த செய்திகள் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.