×

செங்கல்பட்டில் பரபரப்பு இளம்பெண் அடித்து கொலை?: கணவரிடம் போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இளம்பெண் தூக்கிட்டு சடலமாக கிடந்தார். கொலை செய்யப்பட்டாரா என அவரது கணவரிடம் போலீசார் தீவிரமாக  விசாரிக்கின்றனர். செங்கல்பட்டு முருகேசன் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (30). செங்கல்பட்டு மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்கிறார். இவருக்கும்,  அச்சிறுப்பாக்கத்தை ஹேமாவதி (26) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.  ஜெகநாதனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர், அடிக்கடி போதையில் ஹேமாவதியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.இந்நிலையில், நேற்று முன்தினம் படுக்கைஅறையில் ஹேமாவதி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி செங்கல்பட்டு போலீசார்  மற்றும் ஹேமாவதியின் பெற்றோருக்கும், ஜெகநாதன்  தகவல் தெரிவித்தார். இதையறிந்ததும், ஹேமாவதியின் பெற்றோர் பதறியடித்து வந்து,  மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.

தகவலறிந்து, செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சடலத்தை வைத்து, சடலங்குகள் செய்வதற்கு தயாராக இருந்தது  தெரிந்தது. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதற்கிடையில், ஹேமாவதியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். அதில், ஜெகநாதனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அவளை 2வது  திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. அதற்கு இடையூறாக உள்ள எனது மகள் ஹேமாவதியை, அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு  நாடகமாடுகிறார். எங்களது மகள் சாவில் மர்மம் உள்ளது. போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹேமாவதி தற்கொலை  செய்து கொண்டாரா அல்லது ஜெகநாதனே அடித்து கொலை செய்தாரா என  தீவிரமாக விசாரிக்கின்றனர்.



Tags : death ,Chengalpattu , Stir in the red Teen beaten to death ?: Police interrogate husband
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது