×

பதிவுத்துறையில் சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு ஏஐஜி நியமனம்

சென்னை:பதிவுத்துறையில் புலனாய்வு பிரிவு முக்கியத்துவம் வாய்ந்தது. புலனாய்வு பிரிவில் கூடுதல் ஐஜி தலைமையில் ஏஐஜி, இரண்டு செயற்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் தான் ஆய்வு பணி மற்றும் பணியாளர்கள் மீது புகார்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. இதில், ஏஐஜி பணியிடம் காலியாக இருந்ததால், புலனாய்வு பிரிவு சார்பில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு ஏஐஜியாக மகேஷ் என்பவரை நியமனம் செய்து பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். இவர், அம்பத்தூர் மாவட்ட பதிவாளராக இருந்த போது லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தி பணம் கைப்பற்றியதாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.


Tags : AIG Special Vigilance Division , Appointment of AIG Special Vigilance Division in the Registry
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...