×

சிறுமியிடம் சில்மிஷம் முதியவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை நியூ நடராஜபுரத்தை சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் அமைந்தகரை நாகராஜபுரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம், கடந்த 2018ம் ஆண்டு தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.  அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுபற்றி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் முருகவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, போக்சோ வழக்கில் முருகவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : Silmisham , Silmisham old man jailed for 10 years
× RELATED மாணவிகளிடம் தொடர்ந்து சில்மிஷம்: காமக்கொடூர ஆசிரியர் அதிரடி கைது