×

இரவு முழுவதும் அஞ்சலிக்காக வைக்க மாநகராட்சி அனுமதிக்க மறுப்பு: தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது எஸ்.பி.பி.யின் உடல்..!!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இன்று இரவு முழுவதும் அஞ்சலிக்காக உடலை வைத்திருக்க மாநகராட்சி அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினரும் கூட்டு பிராத்தனை மேற்கொண்டனர். இதனையடுத்து விரைவில் குணமடைந்து எஸ்.பி.பி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, மறைந்த எஸ்.பி.பி.யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி.பி. உடலுக்கு திரளானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்.பி.பி. உடல் நாளை காலை 11 மணிக்கு பொன்னேரி அருகே தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று இரவு முழுவதும் அஞ்சலிக்காக உடலை வைத்திருக்க மாநகராட்சி அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது மேலும் எஸ்.பி.பி.யின் உடல் இன்று இரவே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளதால் காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் உடன் இருந்து கவனித்து வரும் நிலையில் அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


Tags : Corporation ,SBP ,farm house ,Tamaraipakkam , SPB , Body, corporation
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு