×

காப்பீடு செய்யாத வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

சென்னை:  காப்பீடு செய்யப்படாத வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் அந்த வானத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு காப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விபத்து தொடர்பாக புதிய நடைமுறைகளை பிறப்பித்துள்ளார்.

அதாவது, மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீடு நியாயமாகவும், விபத்து அறிக்கை சமர்ப்பிக்கும் நடைமுறை எளிமையாகவும் இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவை தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக காவல் துறை டிஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த வழக்கு குறித்து விரைந்து விசாரித்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று உத்தரவிட்ட நீதிபதி, விபத்துகளில் சம்மந்தப்பட்ட, காப்பீடு இல்லாத வாகனங்களை விடுவிக்க கூடாது எனவும், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விபத்து குறித்த அறிக்கையை பராமரிக்க வேண்டும் எனவும் அவற்றை 7 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்க மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி விபத்துக்குள்ளானவரை பரிசோதித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து தீர்பாயங்களில் வழக்கு தொடரும் முன்பு சமரசம் செய்துகொள்ள சம்மந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதற்கு அனுமதி அளிக்கவும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் தீர்பாயங்களுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chennai High Court ,event ,accident , Vehicles, Accident, Chennai High Court, Order
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...