திருவனந்தபுரம்: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகிற்கு உண்மையான இழப்பு என்று நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மலையாள நடிகர் மோகன்லால் ட்வீட் செய்துள்ளார். இதேபோல் எஸ்.பி.பி. மறைவால் இசை உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.