×

அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

டெல்லி : விவசாயிகளிடம் தொடர்ந்து பொய்களைக் கூறுபவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்காக தவறாக வழிநடத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி, இன்று பாஜகவின் முன்னோடி சிந்தனையாளர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் காணொலியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளின் நலன் சார்ந்தவை, வேளாண் துறையில் சீர்திருத்தங்களைச் செய்ய கொண்டுவரப்பட்டவை. இந்த சீர்திருத்தங்கள் மூலம் 85 சதவீதம் உள்ள சிறு, குறு விவசாயிகள் பயன் பெறுவார்கள். தங்கள் விளை பொருட்களை மண்டிகளைத் தவிர்த்து பல்வேறு இடங்களிலும் சுதந்திரமாக நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.இந்த மசோதாவின் பலன்களையும், நன்மைகளையும், யாருக்கு அதிகாரம் கிடைக்கும் என்பதையும் பாஜக தொண்டர்கள் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து வெற்று கோஷங்களை மட்டுமே சிலர் விவசாயிகளுக்கும், தொழிலாளர்ளுக்கும் ஆதரவாக பல ஆண்டுகளாகக் கூறி வருகிறார்கள். விவசாயிகளின் பெயரைக் கூறித்தான் மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் அரசுகளை அமைத்தார்கள். அனைத்து விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் குழப்பமான வாக்குறுதிகளையும், சட்டங்களையுமே கொண்டுவந்தார்கள்.விவசாயகளிடம் எப்போதும் பொய்களைக் கூறுபவர்கள் அவர்களுக்கு பின்னால் மறைந்துகொண்டு, எந்தவிளைவுகளையும் சந்திக்காமல், விவசாயிகளை தூண்டி விடுகிறார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags : Modi , Songs, SB Balasubramaniam, DMK, Chairman, MK Stalin, Funeral
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...