டெல்லி: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பியின் மறைவால் நமது கலாச்சார உலகம் வலுவிழந்துவிட்டது. நாடு முழுவதும் உள்ள இல்லங்களில் பல்லாண்டுகளாக எஸ்.பி.பி.யின் குரல் ஒலித்தது. தனது மெல்லிய குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை வசீகரித்தவர் எஸ்.பி.பி. என கூறினார்.