சென்னை: எஸ்.பி.பி. மறைவு தன்னை வேதனையில் ஆழ்த்தி உள்ளதாக விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல மொழிகளில் பாடி இசைக்கு மொழி கிடையாது என்று நிரூபித்தவர் எஸ்.பி.பி. எனவும், தலைமுறைகளை கடந்து அனைத்து நடிகர்களுக்கும் பாடிய தலைசிறந்த பாடகர் எஸ்.பி.பி. எனவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். திரைத்துறைக்கு மட்டுமில்லாத அனைவருக்கும் எஸ்.பி.பி. மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.