காரைக்கால்: புதுச்சேரி காவல்நிலையத்திற்கு கையெழுத்து போட வராமல் காரைக்கால் பெண் தாதா எழிலரசி தலைமறைவாகியுள்ளார். காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியை சேர்ந்த தாதா எழிலரசி மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் நிபந்தனை ஜாமினில் உள்ள எழிலரசி தலைமறைவானார்.