சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வந்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நில உரிமையாளருக்கு தெரியாமல் அவர்களுக்கு சொந்தமான பகுதியில் திட்டம் கொண்டுவர அனுமதிக்க சட்டம் வழிவகை செய்யும். திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதிக்கும் சட்டத்திருத்தத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.