×

வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லை : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

மயிலாடுதுறை, :வேளாண் சட்ட திருத்த மசோதாவால் விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.மயிலாடுதுறையில் அவர் அளித்த பேட்டி: வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்பவர்கள், எங்கே விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள், எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள், எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்க வேண்டும். நான் ஒரு விவசாயி என்பதால் இந்த மசோதாவை வரவேற்கிறேன். அரசின் குறைந்தபட்ச ஆதாரவிலை எப்போதும் கிடைக்கும்.

அதில் மாற்றமில்லை.எங்கே அதிக விலை கிடைக்கிறதோ அங்கே விவசாயிகள் கொண்டுபோய் தங்களது பொருட்களை விற்றுக்கொள்ளலாம். இதில் எங்கே வந்தது தவறு. இதில் விவசாயிகளுக்கு நஷ்டம் கிடையாது. விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கக்கூடாது என்று போராடுகிறார்கள். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்று போராட்டம் நடத்தினால், என்ன நஷ்டம் என்பதை போராட்டக்காரர்கள் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Maniyan , Agriculture Law Bill, Farmers, Loss, No, Minister OS Maniyan
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்