×

குஜராத்தில் ஓ.என்.ஜி.சி.கிடங்கில் பயங்கர தீ விபத்து.: சேமிப்பு கிடங்குகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் மக்கள் பீதி!!!

அகமதாபாத்:  குஜராத் மாநிலத்தில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கு ஒன்றில் பற்றிய தீயை பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன. குஜராத்தின் சூரத் நகரில் ஓ.என்.ஜி.சி. எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு சொந்தமான ஹஷிரா எரிவாயு பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் இந்த ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆலையானது குஜராத்தின் தெற்கே உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாசீன் எரிவாயு துறையிலிருந்து பெறப்படும் வாயுவை பதப்படுத்தி வந்தது.

இந்நிலையில் ஆலையில் ஏற்பட்ட தீ பலத்த காற்று எதிரொலியாக மற்ற கிடங்குகளுக்கும் தீவிரமாக பரவியது. இதையடுத்து எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. கிடங்குகள் வெடித்து சிதறிய ஒலி 4 கி.மீ வரை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பின்னர், தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன. மேலும் தீயை முழுவதுமாக அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதையடுத்து இந்த விபத்து காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : warehouse ,ONGC ,storage warehouses ,another ,Gujarat , Gujarat, ONGC, Fire, Accident
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...