சென்னை: ராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 90 நாள் விடுப்பு வழங்கக் கோரி தாயார் அற்புதம்மாள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அணையிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு பெற்ற ஒருவாரத்தில் பேரறிவாளனை விடுப்பில் அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.