சென்னை: கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
2020-21ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் மற்றும் பால்வளத் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்களிடமிருந்து கடந்த ஆகஸ்ட் முதல் வரும் 28ம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நாள் வரும் அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.