×

8 குடிசைகள் எரிந்து சாம்பல்

பூந்தமல்லி: சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம், சிவபூதமேடு பகுதியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 8 குடிசைகள் உள்ளன. இங்கு கூலி தொழிலாளர்கள் வாடகைக்கு வசிக்கின்றனர். நேற்று, அனைவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். மதியம், அங்குள்ள ஒரு குடிசையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில், அருகில் உள்ள மற்ற குடிசைகளுக்கும் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து பூந்தமல்லி, அம்பத்தூர், கோயம்பேடு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்கு, அனைத்து வீடுகளும் எரிந்து நாசமாயின.

Tags : 8 huts burnt to ashes
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!