×

இளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர், திருமணவேல் உள்பட 6 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது சிபிசிஐடி

தூத்துக்குடி: தூத்தக்குடி மாவட்டம் தட்டார்மடத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 17ம் தேதி இளைஞர் செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்டார். நெல்லையில் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது. இந்த கொலை வழக்கில் 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த  சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். தூத்துக்குடி அருகே தட்டார்மடத்தில் நிலத்தகராறு காரணமாக கடந்த 17ஆம் தேதி செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட இருவர் சரண் அடைந்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதனால் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.


Tags : CPCIT ,Selvan ,Thirumanavel ,persons ,murder , Selvan murder, Analyst, Thirumanavel, 6 persons, case registered, CPCIT
× RELATED விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட அசோக்...