மதுரை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் விதிகளை முறையாக பின்பற்றக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கோயிலின் ஒப்பந்த பணி விதிமுறைகள், ஒப்பந்த தொகை உள்ளிட்ட விவரங்களை சீலிட்ட கவரில் அளிக்க அறநிலையத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.