×

குட்கா விவகாரத்தில் சட்டப்பேரவை உரிமை மீறல் குழு : மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து திமுக வழக்கு; உயர் நீதிமன்றத்தில் நாளை இடைக்கால உத்தரவு

சென்னை,:சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்து சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க., எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவுள்ளது.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் புகையிலைபொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் கடந்த 2017ல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர்.  
 
இதையடுத்து, எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப் பேரவை உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்படி அவர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை காலத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன்,கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டனர். கு.க.செல்வம் கட்சியை விட்டுநீக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார்ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, உரிமை மீறல் குழுவின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர்.  

இந்த நிலையில் கடந்த 7ம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு தி.மு.க., எம்எல்ஏக்களுக்கு மீண்டும்நோட்டீஸ் அனுப்பியது. அதில் செப்டம்பர் 14ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.
இந்த நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 18தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் வாதிடும்போது, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் சட்டமன்றத்தில் அனுமதி பெற்று தான் ஸ்டாலின் இந்த விவகாரத்தை எழுப்பினார். குட்கா பொருட்களை காட்டி தடை செய்யப்பட்ட பொருள் விற்கப்படுவதை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 28ம் தேதி ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏ’க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை எதிர்த்த வழக்கை விசாரித்த  தலைமை நீதிபதி அமர்வு, தடையை மீறி குட்கா வைத்திருந்தால் கூட அதை நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டுமே தவிர உரிமைன்மீறல் பிர்ச்சனை எழுக்க கூடாது எனக் கூறியுள்ளது.

உரிமை மீறல் இல்லை எனக் கூறிய பின் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, தடையை அமல்படுத்த வேண்டும் என்று தான் அதை சபையில் காட்டியதாக தலைமை நீதிபதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கம் இல்லை என்றார்.மூத்த வக்கீல் அமித் ஆனந்த் திவாரி வாதிடும்போது, உரிமைக் குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏற்கனவே ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே தற்போது பாரபட்சத்துடன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.  2017ல் அனுப்பப்பட்ட பரிந்துரை அடிப்படையில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பரிந்துரை நீதிமன்றத்தால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றார்.
அப்போது, அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, 228 விதிப்படி உரிமைக் குழு உறுப்பினர் அல்லது தலைவர் பாரபட்சமாகவும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நோட்டீஸ் அனுப்பி இருந்தால்மனுதாரர்கள் உரிமை மீறல் குழுவிலேயே ஆட்சேபம் தெரிவிக்கலாம். அது போல செய்யாமல் ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் நீதிமன்றத்தை அணுகி உள்ளனர்.

உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக அவர்கள் பதிலளிக்க 24ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனது அனுமதியில்லாமல் குட்காவை காட்டியது உரிமை மீறல் என்பதால் சபாநாயகர் தாமாக முன் வந்து பிரச்சனையை உரிமைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார். உரிமை மீறல் என்பதை உரிமைக்குழு முடிவு செய்து, சபைக்கு மீண்டும் அனுப்பியது. உரிமைக் குழு மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு விவாதங்கள்  நடைபெறும். தற்போதைய நோட்டீஸ், சபாநாயகரின் அனுமதியின்றி குட்காவை காட்டியதற்காவே அனுப்பப்பட்டுள்ளது.இது வரை 18 எம்.எல்.ஏக்களும் நோட்டீசுக்கு பதிலளிக்கவில்லை என்பதால் நோட்டீசுக்கு தடை விதிக்க கூடாது. நாளையே சட்டமன்றத்தை கூட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை போல திமுகவினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி, குட்காவை காண்பித்தது உரிமை மீறல் இல்லை என்று ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வு  தீர்ப்பளித்துள்ளது. அனுமதி பெறாமல்  காண்பிக்கப்பட்டதா என்பதை முந்தைய நோட்டீசில் உரிமை குழு குறிப்பிடவில்லை. முந்தைய நோட்டீசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்த உடனேயே இரண்டாவது முறையாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.



Tags : infringement panel ,Legislature ,DMK ,High Court , Gutka, Legislature, Violation of Rights, Group
× RELATED சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்