×

படபாணியில் கடத்தப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் மீ்ட்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருப்பூர்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் மீட்கப்பட்டுள்ளார். கர்ணனை கடத்திச் சென்ற கும்பல் தளி பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். கர்ணனை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணனை மர்ம நபர்கள் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளராக  கர்ணன் இருந்து வருகிறார். இவர் இன்று காலை 11 மணியளவில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அன்சாரி வீதியிலுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்து கத்திமுனையில் கர்ணனை 4 பேர் கடத்தி சென்று உள்ளனர். கர்ணனை வலுக்கட்டாயமாக அடித்து, காரில் கடத்தி செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது. பட்டப்பகலில் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்குள் நுழைந்து உதவியாளரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உடுமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கர்ணன் ஏற்கனவே வேறு ஏதும் பிரச்சனையில் ஈடுப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடத்தலுக்கு காரணம் பழைய பகையா, தொழில் போட்டியா அல்லது சொந்த பிரச்சனையா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : Udumalai Radhakrishnan ,aide ,persons , Abducted, Minister, Assistant, Recovered
× RELATED 3,288 நபர்கள் தபால் வாக்கு செலுத்தினர்