×

அணைகள், நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் : தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

தென்காசி : அணைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தொடர் கனமழையால் குண்டாறு, இராமநதி, கடனாநதி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன என்றும் எனவே எந்த நேரத்திலும் அணைகள் திறக்கப்படும் என்றும் ஆட்சியர் அருண் சுந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தடையை மீறி நீர்வீழ்ச்சிகளுக்கு செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  


Tags : Tenkasi District Collector , Dams, Waterfalls, People, Tenkasi, District Collector, Warning
× RELATED சுதந்திர தின விழாவில் பங்கேற்க...