×

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

செங்கல்பட்டு: இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மறைமலைநகர் அடுத்த வல்லாஞ்சேரியை சேர்ந்தவர் மலர் (19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது.). மறைமலைநகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். மறைமலைநகர் கிழக்கு பொத்தேரியை சேர்ந்தவர் நிர்மல்குமார் (23). தினமும் நிர்மல்குமார் வீட்டு வழியாக தினமும், மலர் வேலைக்கு செல்வார். அப்போது, அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இதையொட்டி, கடந்த 3 ஆண்டுகளாக, அவர்கள் காதலித்து வந்தனர். பல இடங்களில் சுற்றி திரிந்தனர். இந்நிலையில், நிர்மல்குமாருக்கு வேறு பெண்ணுடன்  திருமணம் நடத்த அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதையறிந்த மலர், நிர்மல்குமாரிடம் தன்னை திருமணம் செய்யும்படி கூறியுள்ளார். ஆனால், அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில், மலர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து, நிர்மல்குமாரை கைது செய்தார். பின்னர் போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


Tags : teenager , Young man arrested for cheating on teenager
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை