வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இங்குள்ள அலுவலக ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், பேரூராட்சியின் வலம் மிக்க பூங்கா பகுதியில் தியான பயிற்சி நேற்று நடந்தன. பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா தலைமை தாங்கினார். தனியார் தொண்டு நிறுவன யோகா பயிற்சியாளர் கலந்துகொண்டு, பேரூராட்சி ஊழியர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மூச்சு பயிற்சி, தியானம் உள்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கினர். இந்த பயிற்சியை தினமும் செய்து வந்தால் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க முடியும் என நம்பிக்கையை வலியுறுத்தும் வகையில் இப்பயிற்சி அமைந்திருந்ததாக கலந்துகொண்ட பேரூராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.