திருப்பூர்: திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் காவல் நிலையத்தில் மரணம் அடைந்துள்ளார். மணிகண்டனின் உடல் உற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விசாரணைக்காக வந்த கோட்டாட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.