×

10 ஆண்டாக அலைந்தும் இலவச வீடு கிடைக்காததால் 2 மகளுடன் தற்கொலை செய்வேன்: தொழிலாளி மனுவால் பரபரப்பு

திருவாரூர்: திருவாரூரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கடந்த பத்து வருடமாக இலவச வீடு கேட்டு வரும் நிலையில் கிடைக்காததால் 2 மகளுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

திருவாரூர் பெரியார் தெருவில் வசித்து வருபவர் செந்தில் (43). சமையல் தொழிலாளியான இவருக்கு கடந்த 12 வருடத்துக்கு முன்னர் மரகதம் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் சில ஆண்டுகளிலேயே மரகதம் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இந்நிலையில் தனது 2 மகள்களுடன் செந்தில் பெரியார் தெருவில் இருந்து வரும் தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். தனக்கென்று சொந்தமாக வீடு ஒன்று இலவசமாக கேட்டு கடந்த 10 வருட காலமாக தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என பலமுறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இறுதியாக கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது அந்த மனுவில் 10 ஆண்டுகளாக இலவச வீடு கேட்டு மனு அளித்துவரும் தனக்கு வீடு கிடைக்கவில்லை என்றும் எனவே 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்ததையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பாதுகாப்பிற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த போலீசார் தொழிலாளி செந்திலை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : daughters ,house , Thiruvarur, Suicide, Labor Petition
× RELATED தீக்குளித்த பெண் சாவு கணவன் காயம்