டெல்லி: 8 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப்பெற மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தேநீர் எங்கள் கோபத்தை தணிக்காது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் முழக்கம் எழுப்பியுள்ளனர். எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.