×

உயர்மட்ட குழு பரிந்துரைத்த விஷயங்களை அரசு செயல்படுத்தும்: முதல்வர் எடப்பாடி உறுதி

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கோவிட்-19 ஊரடங்கால், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக  தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கையை குழுவின் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவருமான சி.ரங்கராஜன் நேற்று சமர்ப்பித்தார். இந்த உயர்மட்ட குழுவுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க விரைந்து, வேகமாக எல்லா துறைகளையும் அலசி ஆராய்ந்து கிட்டத்தட்ட 250 பக்கம் கொண்ட,  என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக, தெளிவாக அரசுக்கு  சமர்ப்பித்துள்ள குழுவின் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் அரசின் சார்பாக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா ஒரு புதிய நோய். உலகமே அச்சத்தில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், தமிழகம் வளர்ச்சி பாதையை அடைய வேண்டும், வளர்ச்சியை நோக்கிச்செல்ல எவ்வாறு கையாள வேண்டும் போன்ற விவரங்களை உள்ளடக்கி, சுருக்கமான  கருத்துகளை இங்கே தெரிவித்திருக்கின்றீர்கள். அரசு அவற்றை உரியமுறையில் பரிசீலித்து, தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட விஷயங்களை உன்னிப்பாக ஆராய்ந்து தமிழகத்தின் பொருளாதாரம் மேம்பாடு  அடைவதற்கும், வளர்ச்சியை நோக்கி செல்வதற்கும் உங்களுடைய கருத்துகளை அரசு கவனமாக எடுத்துக் கொள்ளும். அரசின் வேண்டுகோளை ஏற்று, கொரோனா நோய் தொற்று இருக்கும் சோதனையான காலகட்டத்தில்கூட, அரசாங்கத்திற்கு  உதவி செய்ய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களது சொந்த பணிகளையெல்லாம் விட்டுவிட்டு, அரசுக்கு துணை நின்ற மரியாதைக்குரிய குழுவின் தலைவர் சி.ரங்கராஜனுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



Tags : government ,Edappadi ,committee , The government will implement the things recommended by the high level committee: Chief Minister Edappadi assured
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...