×

தூக்கில் தொங்கிய 2 வாலிபர்கள் சடலம் மீட்பு

கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த பெரும்பாக்கம் கிருஷ்ணவேணி அம்மன் நகர், 4வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவரது நண்பர் சென்னை, கண்ணகி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (21). தனியார் கம்பெனியில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வந்தனர். கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர், திருவள்ளுவர் சாலை, வைஷ்ணவி நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி பத்மா (28). இவரும் அதே கம்பெனியில் சூபர்வைசராக வேலை செய்கிறார். மணிகண்டனும், ஏழுமலையும் பத்மா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பத்மா வீட்டுக்கு, 2 பேரும் சென்றனர். அங்கு,  இன்று ஒரு நாள் மட்டும் இங்கு தங்கிவிட்டு, காலை செல்கிறோம் என கூறியுள்ளனர். அசோக்குமார், சாவியை அவர்களிடம் கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் மேடவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை, வாலிபர்கள் 2 பேரும், அசோக்குமார் வீட்டில் தூக்கிட்டு சடலமாக கிடந்ததை அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சியடைந்தனர். புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் தனியார் கொரியர் நிறுவனம் உள்ளது. இதன் அலுவலகத்தில் வைத்திருந்த 60 ஆயிரத்தை, நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும், அருகில் உள்ள டீக்கடையில் 10 ஆயிரம், 5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள், டீக்கடையை ஒட்டியுள்ள தனியார் உணவகத்தில் 3 ஆயிரம், பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள், கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்க் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

புகரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் த்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜீத் (21). கடந்த ஆண்டு அதே ஊரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 5 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அவரது மனைவி கோபித்து கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அஜீத், கடந்த 10ம் தேதி மாமனார் வீட்டுக்கு சென்ற அஜீத், மனைவியை குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார்.

இதனால், மனமுடைந்த அஜீத், வீட்டில் இருந்த எலி மருந்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை, உறவினர்கள் மீட்டு, சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜீத் நேற்று இறந்தார்.புகாரின்படி உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஸ்ரீபெரும்புதூர்:  படப்பை அடுத்த சாலமங்கலத்தை சேர்ந்தவர் குகன் (40). அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் குகன், படப்பை  அண்ணாநகர், முதல் தெருவில் வசிக்கும் தனது அக்கா ஆதிலட்சுமியை பார்க்க சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் அக்கா வீட்டின் பின்புறம் உள்ள கிணறு வழியாக நடந்து சென்றபோது, திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக கிணற்றில் விழுந்தார். இதை பார்த்த ஆதிலட்சுமியின் மகன் சதீஷ் (16), கிணற்றில் குதித்து குகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இவருக்கும் மூச்சு திணறலால் தத்தளித்தனர்.தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரையும் மீட்டனர். ஆனால், குகன் இறந்துவிட்டார். புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : teenagers , Body recovery of 2 teenagers hanged
× RELATED இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை...