மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கடப்பாக்கம் கிராமத்தில் பொதுமக்கள் சாலைமறியலால் போக்குவரத்து முடங்கியது. இடைக்கழிநாடு பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவரை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்சில் வந்த பேரூராட்சி துணைத் தலைவர் ராமச்சந்திரன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.