×

பெரம்பலூர் அருகே விபத்து: புளிய மரத்தில் கார் மோதி இன்ஜினியர் 2 பேர் பலி

பெரம்பலூர்: சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த லோகநாதன் மகன் லட்சுமிகந்தன்(34). சென்னை ஜவஹர் நகரைச் சேர்ந்த மனோகரன் மகன் விஷ்ணுகுமார் (40). மருத்துவமனைகளில் ஸ்கேன், எக்ஸ்ரே, டயாலிசிஸ் போன்ற கருவிகளை பொருத்தி தருகின்ற பயோமெடிக்கல் இன்ஜினியர்களான இருவரும், மதுரை தனியார் மருத்துவமனைக்கான ஆர்டரின் பேரில் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

இவர்களுடன் பணிபுரியும் பிரபு மனைவி டயானா (40) என்பவரும் உடன் சென்றுள்ளார். காரை லட்சுமிகந்தன் ஓட்டி சென்றார். காரின் இடதுபுறம் டயானாவும், பின்புறம் விஷ்ணுகுமாரும் அமர்ந்திருந்தனர். நேற்று காலை 10 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மங்களமேடு துணைமின் நிலையம் அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் கீழே இறங்கி புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. டிரைவரின் தூக்க கலக்கத்தால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு லட்சுமிகந்தன், விஷ்ணுக்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். டயானா கவலைக்கிடமான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மங்களமேடு இன்ஸ்பெக்டர் கலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Engineer ,car accident ,Perambalur , Perambalur, accident
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்