திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று 207 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தின் பலி எண்ணிக்கை 521 ஆகவும் உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 149 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 922 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 1,697 பேர் சிகிச்சையில் உள்ளனர்.