×

கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 5,19,537 ஆக அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 8,191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,19,537 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 101 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,023 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்தில் 98,043 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 4,13,452 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


Tags : state ,Karnataka , Karnataka, 8,191 people, Corona, the total number increased to 5,19,537
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...