×

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சேர்ந்தவர்  சஞ்சய்பிரதீப் (32). இவர் அதே ஊரில் டிஆர்ஓ உரிமம் பெற்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் சட்ட விரோதமாக பேன்ஸி ரக வெடிகளையும் தயாரித்துள்ளனர். இங்கு 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று காலை காட்டுப்பகுதியில் பட்டாசு தயாரித்தபோது திடீர் விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்து சிதறின.

உடனடியாக தொழிலாளர்கள் ஓடியதால் உயிர் சேதம் இல்லை. தொடர்ந்து பட்டாசுகள் தீப்பிடித்து எரிந்தது.   தகவலறிந்து, சிவகாசி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து உரிமையாளர் சஞ்சய் பிரதீப்பை தேடுகின்றனர்.

Tags : firecracker factory ,Sivakasi , Fire at a firecracker factory near Sivakasi
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு