×

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக் கூடாது: மத்திய அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தரக் கூடாது என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமின்றி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரையும் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியையும், பிற அனுமதிகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

எடியூரப்பாவின் இந்த கோரிக்கை தமிழக உழவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கு இதுவரை அளிக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இதை பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Karnataka ,dam ,government ,Anbumani , Karnataka should not be allowed to build a dam in Meghadau: Anbumani urges central government
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...