அபுதாபி: ஐபிஎல் 2020 துபாயில் கொரோனா காரணமாக எந்தவித ஆரவாரமின்றி தொடங்கியது. கொரோனா காரணமாக ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. இதனை தொடர்ந்து 163 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கவுள்ளது.