பந்தலூர்: சேரம்பாடி அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ சரகம் 1 பகுதியில் நேற்று சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சேரம்பாடி வனச்சரகம் ரேஞ்சர் சின்னத்தம்பி மற்றும் வனவர் சஞ்சய் உள்ளிட்ட வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது மர்மமான முறையில் சுமார் நான்கு வயது மதிக்கதக்க பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.
தொடர்ந்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். பந்தலூர் கால்நடை மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சிறுத்தைக்கு உடற்கூறு பரிசோதனை செய்தார் உடல் உறுப்புகளின் ஆய்வுக்குப் பின் சிறுத்தை இறப்பிற்கான காரணம் தெரிய என வனத்துறையினர் தெரிவித்தனர்.