டெல்லி: இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய ஐஎன்எஸ் விராட் போர் கப்பல் இன்றுடன் கடைசி பயணம் மேற்கொள்கிறது. மும்பையிலிருந்து குஜராத்தின் அலங் கப்பல் உடைக்கும் தளத்திற்கு கடைசி பயணத்தை விராட் போர் கப்பல் தொடங்குகிறது. பிரிட்டனிலிருந்து வாங்கிய ஒரே போர் கப்பலான ஐஎன்எஸ் விராட் நாளை மறுநாளுடன் ஓய்வு பெறுகிறது.