×

தாம்பரத்தில் 380 வீடுகளை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ்...!! - வீடுகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்து மக்கள் வாக்குவாதம்!!!

செங்கல்பட்டு:  தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் ஏரி ஆக்கிரமிப்பை தடுக்கும் நடவடிக்கையாக 380 வீடுகளை இடிக்க நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்நிலையில் அதனை ஒட்டி கண்ணகி தெரு, பெரியார் தெரு, ராம கிருஷ்ணா புறம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பெருபாலான வீடுகள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதனை தடுக்கும் நடவடிக்கையாக சுமார் 380 வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் இன்றைய தினம் நோட்டீஸ் ஒட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த பணியின்போது வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரும் அவர்களுடன் வந்திருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து அதிகாரிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதாவது 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இப்பகுதியில் வசித்து வருகிறோம், தொடர்ந்து அரசிடம் இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம், தற்போது அதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வீடுகளை இடிக்க நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இருந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இனுப்பினும் பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்படவில்லை. இதனால் காவல் துறையினர் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இந்த குடியிருப்பை சேர்ந்த சிலர் குழுவாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள் என கூறினார். இதனையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஒரு குழுவினர் ஆகியோர் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ரவிசந்திரன் முன்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்றுள்ளனர். இதற்கிடையில் அப்பகுதியில் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பகுதி முழுவதும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Tags : houses ,Tambaram , Copper, officers, notices, people, argument
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...