×

சென்னை வளசரவாக்கம் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் போலி நகைகளை வைத்து ரூ.12 லட்சம் மோசடி!

சென்னை: சென்னை வளசரவாக்கம் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் போலி நகைகளை வைத்து ரூபாய் 12 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆலப்பாக்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன் 440 கிராம் நகைகளை வைத்து கடந்த 2018ல் ரூபாய் 8 லட்சம் பெற்றுள்ளார். ராஜேஸ்வரன் என்பவர் 193 கிராம் நகைகளை வைத்து ரூபாய் 4 லட்சம் பணம் பெற்றுள்ளார். சத்தியநாராயணனும், ராஜேஸ்வரனும் அடகு வைத்த நகைகளுக்கு பணம் கட்டாமல் இருந்ததால் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அடகில் இருந்த நகைகள் அனைத்தும் கவரிங் என்பது தெரியவந்தது.

Tags : Chennai ,Valasaravakkam ,Union Bank of India ,jewelery , Chennai Valasaravakkam Union Bank of India scam worth Rs 12 lakh with fake jewelery!
× RELATED சென்னை அடையாறு, பெருங்குடி,...