கோவை: மேட்டுப்பாளையம் வனசரகத்தில் கும்கி யானை உதவியுடன் தேடப்பட்ட ஆண் காட்டு யானை உயிரிழந்தது. நெல்லித்துறை வனப்பகுதியில் முன்னங்கால், உடலில் காயங்களுடன் சுற்றி வந்த 20 வயதான யானை இறந்தது. காயமடைந்த நிலையில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் மலைப்பகுதியில் சறுக்கி விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்தது.