திருவள்ளூர்: சென்னை முகலிவாக்கம் வேலம்மாள் ஓலோஜி டெக் பள்ளி மாணவர்கள் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் கண்களுக்கான பாதுகாப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த 2 நாட்கள் தேசிய அளவில் நடத்திய ஆன்லைன் வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டனர். இந்திய அளவில் நடைபெற்ற கண்களுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆன்லைன் வினாடி, வினா போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்குசான்றிதழ்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
வேலம்மாள் ஓலோஜி டெக் பள்ளி மாணவன் குருதேவ் 2 வது இடத்தை பிடித்தார். மாணவன் எஸ்.ஹரிஷ் அரை இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றார். இவர்களை வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் , இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் ஆகியோர் வாழ்த்தினர்.