×

லாரி மோதி 2 பேர் பலி ஒருவர் படுகாயம்

புழல்: சோழவரம் அருகே அத்திப்பேடு, அண்ணா தெருவை சேர்ந்தவர்கள் விக்னேஷ் (18), கவுதம் (18), நெல்சன் (17). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள் நேற்று முன் தினம் மாலை ஒரே பைக்கில் காரனோடை அருகே ஜனப்பசத்திரம் கூட்டு சர்வீஸ் சாலையில் வேகமாக சென்றனர். அப்போது பொன்னேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு லாரி, இவர்களின் பைக்மீது எதிர்பாராத விதமாக  வேகமாக மோதியது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்தில் பலியானார். கவுதம், நெல்சன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சோழவரம் போலீசார் விரைந்து வந்தனர்.அங்கு படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில், சிகிச்சை பலனின்றி, நேற்று நெல்சன்(17) உயிரிழந்தார்.  விபத்தில் பலியான விக்னேஷின் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில்,  போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : collision ,Larry , Larry collision kills 2, injures one
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...