திருவள்ளூர்: விளம்பர போர்டு அமைக்கும் மின்சாரம் பாய்ந்து 3 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள கடை ஒன்றின் விளம்பர போர்டு அமைப்பதற்காக கருணாகரன், அருண், பாளையம் ஆகிய 3 பேரும் வேலை செய்து கொண்டிருந்தனர். விளம்பர போர்டை மேலே தூக்கியபோது உயர்அழுத்த மின்சார கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பேருக்கும் அதிகளவில் தீக்காயம் ஏற்பட்டு அலறி துடித்தனர். உடனடியாக பாமக நிர்வாகிகள் வ.பாலயோகி, நா.வெங்கடேஷன், இ.தினேஷ்குமார், ஊராட்சி செயலர் மகேந்திரன் ஆகியோர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையா, சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் மின்சாரம் பாய்ந்து பாதிப்புக்குள்ளா–்னவர்களை மீட்டு ஆம்புலன்சில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
