தண்டையார்பேட்டை: மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி பப்லு (39), தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ராயபுரம் ரயில் நிலையம் அருகே வசித்து வருகிறார். கடந்த 6ம் தேதி வேலை தேடுவதுபோல் பப்லு வீட்டிற்கு வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனில் (24) நூதன முறையில் அவரது பெண் குழந்தையை கடத்தி சென்றார். போலீசார் விசாரணையில், கடத்தப்பட்ட குழந்தை நாவலூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டனர். தலைமறைவாக உள்ள சுனிலை தேடி வருகின்றனர்.