×

சென்னை- மதுரை- ரயில் வழித்தடத்தில் ரயிலின் வேகம் மணிக்கு 110 கி.மீ. ஆக அதிகரிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மதுரை- சென்னை ரயில் வழித்தடத்தில் இருமார்க்கங்களிலும் ரயிலின் வேகம் மணிக்கு 110 கி.மீட்டராக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ரயிலின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சோதனைகள் முடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை- மதுரைக்கு இனி இருமார்க்கங்களும் ரயிலின் வேகம் மணிக்கு 100  கி.மீ.,லிருந்து 110 ஆக அதிகரித்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : Chennai ,Madurai-Rail ,Southern Railway Announcement , On the Chennai-Madurai-Rail route, the speed will be 110 kmph. Increase: Southern Railway Announcement
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...