×

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,34,701-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,877-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,98,103-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 31,721- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Tags : Delhi , In Delhi, 4,432 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு